நதி
ஓடுகிறது
எதிர்பார்ப்பே
இல்லாமல்..!
புரிந்து
கொள்வதற்குள்
முடிந்து விடுகிறது
அவசரம் அவசரமாய்..!
கடவுளை
நம்பாதவனும்
வணங்கும்
ஒரே தெய்வம்..!
ஆன்மாவை
வருடுகிறது
ஆண்டவனின் குரல்..!
நாள்தோறும்
முடிவு செய்துவிட்டே
தூங்குகிறேன்
நாளை வேலைக்கு
போவதில்லையென்று..!
போட்ட 'கூழைக்கும்பிடுகளும்'-
'ஆமாம் சாமிகளும்'
சிரிகின்றது ரூபாய்
நோட்டுகளாய்..!
எனது
எல்லா மின்னஞ்சலுக்கும்
ஒரே கடவுச்சொல்லாய்
உனது பெயர்..!
பேருந்து பயணத்தில்..!
அழைத்து
வருகின்றன
ஜன்னலோர மழையும்
- மல்லிகை வாசமும்
உனது ஞாபகங்களை..!
காதலில்
கலப்படம்
வெடிக்கிறது
வன்முறை..!
உன் உதடுகள்
என்ன மெய்யெழுத்தா?
புள்ளிவைத்துப்
படைத்திருக்கிறானே இறைவன்..!









Post a Comment